Wednesday, July 23, 2014

நீர் பிம்பம் நீதானா நீதானா | கவிதை



கடற்கரையோர கல்லறைக் கூரையில் 
காற்றில் சலசலக்கிறது தேங்கிய மழைநீர்
தானும் ஒரு கடல் என்ற நினைப்பில் 

யுவதிகள் வந்து செல்கிறார்கள்
ஜோடிகளும் கூடத்தான்
முகம் பார்க்க தலை கோத
வான்வெளியின் பிரதிபலிப்பில் 
வான் ஏக முகம் கலைய

கல்லறைக்குள்ளிருந்து தவிக்கின்றன 
என் கண்கள் 

கலையும் நீர் பிம்பம் நீதானா நீதானா

No comments: