Tuesday, November 27, 2012

பாசானின் சமஸ்கிருத நாடகங்கள்

“தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்?” கட்டுரையை இத்தளத்தில் படித்துவிட்டு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. நண்பர்களும் டிவிட்டர், ஃபேஸ்புக் என்று அதிகமும் பகிர்ந்திருப்பதாக அறிகிறேன். நன்றி. நான் இன்று ராஞ்சியிலுள்ள ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் நாட்டுப்புறவியல் பயற்சிப் பட்டறையில் உரையாற்ற பயணப்பட இருக்கிறேன். ஆகையால் எல்லா கடிதங்களுக்கும் உடனடியாக எதிர்வினையாற்ற இயலாது.



நன்றி வுர்ஸ்பர்க் பல்கலை இணைய தளம்


வினய் ரஞ்சன் என்ற வாசகர் பாசானின் நாடகங்கள் இன்னும் நிகழ்த்தப்படுகின்றனவா என்று கேட்டு எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்திற்கு மட்டும் உடனடியாக பதிலளிக்கிறேன். பாசானின் சமஸ்கிருத நாடகங்கள் சம்ஸ்கிருதத்திலேயே கேரளத்தின் கூடியாட்டத்தில் நிகழ்த்தப்படுகின்றன. கூடியாட்டத்தில் நிகழத்தப்படும் பாசானின் நாடகங்களை முறையாக ஆவணப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுருக்கிறது ஜெர்மனியிலுள்ள வுர்ஸ்பர்க் பல்கலைக் கழகம். இந்த ஆவணப்படுத்துதலை முறையாக செய்து மொழிபெயர்ப்புகளோடும் குறிப்புகளோடும் வெளியிட்டவர்கள் வுர்ஸ்பர்க் மற்றும் டுபிங்கன் பல்கலைப் பேராசிரியர்களான ஹெய்ட்ருன் புரூக்னரும் ஹெய்க்கே மோசரும். பேராசிரியர் ஹெய்ட்ருன் ப்ரூக்னரின் அழைப்பின் பேரில் போனவருடம் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரும் பேராசிரியராய் போயிருந்தேன். அப்போது பாசான் வீடியோக்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டிருக்கவில்லை. வினய் ரஞ்சனின் கடித்தத்தைத் தொடர்ந்து நேற்று வுர்ஸ்பர்க் பல்கலையின் இணைய தளத்திற்கு சென்றபோது எல்லா வீடியோக்களும் கிடைப்பதைப் பார்த்தேன்.

வுர்ஸ்பர்க் பல்கலையின் பாசான் multi media databaseக்கான சுட்டி இதோ:
http://www.indologie.uni-wuerzburg.de/bhasa/video-listen/index.html

No comments: