Tuesday, November 22, 2011

ஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கை



கண்ணாடி ஜன்னலில்
முகத்தோடு முகம் தேய்த்து
காதோடு காது நக்கி
காதலாகி கசிந்துருகி
கட்டிலடிக் கூடலில்
குட்டிகள் ஏழாயிற்று

மரப்பெட்டி முதல் வீடு
அடுப்படி இரண்டாம் வீடு என
புகைபோக்கி வந்தடைகையில்
வீடும் ஏழாயிற்று

எலி துரத்தி ஒரு ஜென்மம்
பேயினைச் சீறி மறு ஜென்மமென
சோம்பல் முறித்து
கட்டில் கால் தேய்க்கையில்
விரய ஜென்மும் ஏழாயிற்று


No comments: