Thursday, November 24, 2011

என் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ

தோல் பொம்மலாட்ட கோமாளி பொம்மை



“ஆளற்ற அந்த கடற்கரையில்
தவிக்கும் நுரைகள் 
பாதங்களில் குமிழியிடும்

ஈரமற்ற கைவிரலிடுக்குகளின் வழி
நினைவற்ற பிடி மணல்
ஒட்டாமல் விழும் 

தூரத்து கப்பல்கள்
ஆழ்கடல் சேரும் குதூகலத்தில்
பாய் மரம் விரிக்கும்

என் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ”

என்றெழுதி கோமாளி உனக்குத் தருவான்



No comments: