Saturday, November 12, 2011

ரேழியில் ஒரு பாவை




தமிழ்நாட்டு தோல் பாவை 'பாடகி'



ரேழியில் ஒரு
பாவை பாடியது

குடமே
பனிக்குடமே
நற்குடமே
பொற்குடமே

இலையே
சிற்றிலையே
(முதுகு நோவ)
இன்று முற்றும்
இருந்திளைத்த சிற்றிலையே*

குயிலே
சிறுங் குயிலே
கருங் குயிலே
கூவுமென் கருங்குயிலே

சங்கே
நற்சங்கே
வெண் சங்கே
கோலப்பெருஞ் சங்கே

குடம் ஆறாகவே
இலை காடாகவே
குயில் வான் ஆகவே
சங்கு கடலாகவே

கொங்கைக்
குங்குமம்
தான் அழியவே

அருள்வாய்
தருவாய்
நிறைவாய்




--------------------------------------
* ஆண்டாள்

4 comments:

Anonymous said...

புன்னகைக்க வைத்தது :)

Anonymous said...

Beautiful !! real fun to just read it.

Balaji Srinivasan said...

choodagam
tholvalai
thodu
sedvippoo
padagam

perum parai
kola vilakku
kodi
vidhanam

ukkam
thattoli

kaanam serndhu
koodi irundhu
kulindhaval polum.... :)

Anonymous said...

சூடகம்
தோள் வளை
தோடு
செவிப்பூ
பாடகம்

சங்கம்
பெரும் பறை
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி

கானம் சேர்ந்து
கூடி இருந்து
குளிர்ந்தவள் போலும் .... :)
Balaji Srinivasan