Friday, October 22, 2010

சற்றே ஓய்வாய் இருங்கள்

நகம் கடித்து நகம் கடித்து
நகக் கண்களிலிருந்து
கொட்டுகிறது
குருதி

உட்கார்ந்த இடத்திலிருந்தே
பதற்றத்தில்
கழிகிறது
சிறுநீர்

தீக்கனவின்பாற்பட்டு
வியர்த்து
விழிக்கிறது
நள்ளிரவில் உடல்

சிறு சப்தத்திலும்
கூசி
படபடக்கிறது
மார்பு

எந்தக் கோட்டையையும்
பிடிக்கப்போவதில்லை உங்கள் எழுத்து
சற்றே ஓய்வாய் இருங்கள்

No comments: