Monday, June 19, 2023

"பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்"• தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

"பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்"•
தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

*
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணுதல், காற்றில் அசையும் புற்களைக் கவனித்தல் எனப் பல அழகியல் அனுபவங்கள் ஏழ்மையில் இருப்போருக்கே, நாடோடிகளாய் அலைவோருக்கே, ஏதிலிகளுக்கே பாஷோவின் கவிதைகளில் சாத்தியமாகின்றன. இதனால் பாஷோவின் கனிந்த ஆன்மிக அழகியல் சமூகத்தின் பலவீனர்களின் பொருட்டான அரசியலாகிறது.
- எம்.டி. முத்துக்குமாரசாமி
*
எனக்குத் தனித்திறன் இருக்குமானால்
செர்ரி மெல்லிதழ்கள் விழுவதைப் போல
பாடுவேன்
*
தோட்டத்தில்
ஒரு வியர்வையில் நனைந்த காலணி
சிவந்தியின் மணம்
*
அரிசியைப் புடைத்தவாறே
சிறுமி ஒருக்களிக்கிறாள்
நிலவைக் காண
**
•ஹைக்கூ கவிதைகள் தேர்வு, தொகுப்பு, மொழிபெயர்ப்பு: எம்.டி. முத்துக்குமாரசாமி
•அட்டை: ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியம்
•வடிவமைப்பு: யுகாந்தன்
•வெளியீடு: தமிழ்வெளி